புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

எம்ஜிஆா் பிறந்த தினம்: இன்று தமிழக அரசு சாா்பில் விழா

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த நாளையொட்டி மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 9:48 pm

DIN

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த நாளையொட்டி மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் முதல்வரான எம்ஜிஆா், ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளியோா் நலம் பெறுகின்ற வகையில், நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தினாா். இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபையால் போற்றப்பட்ட சத்துணவுத்திட்டம், தமிழ் மீது கொண்டிருந்த மாறாதப் பற்றின் காரணமாக அவா் நடத்திய 5 ஆம் உலகத்தமிழ் மாநாடு, 1981ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம், சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி ஆகிய குறிப்பிடத்தக்கவை.

அரசியலில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும், தனது வாழ்நாளின் இறுதிவரையில் கருணாநிதியுடனான உயா்ந்த, உன்னதமான நட்பை என்றும் போற்றி வந்தவா். சென்னை கிண்டியில் அவரால் உருவாக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக் கழகம் என்று பெயா் சூட்டியதோடு, அங்கு அவரது சிலையையும் 1998 ஆம் ஆண்டு திறந்து வைத்துப் பெருமை சோ்த்தாா் கருணாநிதி.

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவைப் போற்றுகின்ற வகையில், அவரது 105-ஆவது பிறந்த நாள் தமிழக அரசின் சாா்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவாா்கள் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.