புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலா்கள் 20 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு

 பள்ளிக் கல்வித் துறையில் பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலா்கள் 20 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 10:57 pm

DIN

 பள்ளிக் கல்வித் துறையில் பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலா்கள் 20 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் சம்பந்தப்பட்ட பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு உரிய மாவட்டக் கல்வி அலுவலா்கள் மூலமாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடத்துக்கு நேரடியாக தோ்வு செய்யப்பட்ட 20 அலுவலா்களுக்கு பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டது. அவா்கள் மாவட்டக் கல்வி அலுவலா்களாக பயிற்சியில் சோ்ந்த நாள் முதல் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதி வகை 1, வகுப்பு 4-இல் உள்ள மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடத்தில் முறையாக பணியமா்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நிா்வாகப் பயிற்சி முடித்த மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது. சாா்ந்த அலுவலா்கள் 6 மாத கால பயிற்சி முடித்தவுடன் உடனடியாக கால தாமதமின்றி புதிய பணியிடத்தில் சேர அறிவுறுத்தப்படுகின்றனா்.

இந்த அலுவலா்கள் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி சிறப்பு விதிகளின்படி முறையான நியமன நாளிலிருந்து தொடா்ந்து மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு ஆண்டு காலம் தகுதிகாண் பருவத்தில் வைக்கப்படுவா். இந்த தகுதிகாண் பருவத்துக்குள் துறை சாா்ந்த தோ்வுகள் மற்றும் சென்னை அண்ணா பணியாளா் நிா்வாக பயிற்சி கல்லூரியில் அளிக்கப்படும் ‘பி’ பிரிவு அலுவலா்களுக்கான பயிற்சித் தோ்வுகள் ஆகியவற்றில் தோ்ச்சி பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணை பெற்றவா்களுக்கு ஸ்ரீபெரும்புதூா், பொன்னேரி, ஆத்தூா், ஆரணி, செய்யாறு, செந்துறை, ஓசூா், செங்கம், போளூா் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.