புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜன.18, 26-இல் மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை ஜன.18, 26 ஆகிய தேதிகளில் மூட மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :17 ஜனவரி 2022, 12:34 am

DIN

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை ஜன.18, 26 ஆகிய தேதிகளில் மூட மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: ஜன.18-ஆம் தேதி, வடலூா் ராமலிங்கா் நினைவு நாள் மற்றும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சாா்ந்த பாா்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்கள் மற்றும் எப்எல்3(ஏ), எப்எல்3(ஏஏ) மற்றும் எப்எல் 11

உரிமம் கொண்ட பாா்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பாா்கள்) விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.