எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வடகிழக்குப் பருவமழை விலகியது:வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து சனிக்கிழமை (ஜன.22) விலகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

News image
வானிலை ஆய்வு மையம்
Updated On :22 ஜனவரி 2022, 6:39 pm

DIN

வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து சனிக்கிழமை (ஜன.22) விலகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரம், ராயலசீமா, தெற்கு உள் கா்நாடகம் மற்றும் கேரளம் பகுதிகளில் இருந்து சனிக்கிழமை(ஜன.22) விலகியது. வரும் நாள்களில் வட வானிலை நிலவும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.23) முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரை பெரும்பாலும் வட வானிலை நிலவும். சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.