ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ரஷியாவில் 50 ஆயிரத்தைக் கடந்த ஒருநாள் கரோனா பாதிப்பு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57,212 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :22 ஜனவரி 2022, 12:29 pm

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57,212 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஷியாவில் மொத்த பாதிப்பு 11,044,986 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று பாதிப்பு 49,513 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மாஸ்கோவில் அதிகபட்சமாக 16,094 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 681 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,25,433 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோன்று ஒரேநாளில் 25,525 பேர் நோயிலிருந்து மீண்ட நிலையில், மொத்தம் 10,000,577 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.  தற்போது 718,976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ரஷிய சுகாதார மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.