மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரூரிலிருந்து அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்: லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்

கரூர் மாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரிகளை சிறைப்பிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
கரூரிலிருந்து அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்
Updated On :24 ஜனவரி 2022, 10:27 am

DIN

ஈரோடு: கரூர் மாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரிகளை சிறைப்பிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தென்னிலை வழியாக  கரூரிலிருந்து உரிய அனுமதியின்றி , தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கிராவல் மண் கடத்தப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும்  பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று தென்னிலை அருகே  ராசாம்மாளையம் என்ற இடத்தில் கரூரிலிருந்து உரிய அனுமதியின்றி, அதிகளவு கிராவல் மண் ஏற்றி வந்த லாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் அதிகளவு கிராவல் மண்ணை கிராமத்தின் வழியாக ஈரோட்டிற்கு கடத்தி செல்வதால் சாலைகள் பழுதடைந்து, விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி  கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது லாரிகளின் அனுமதி சீட்டுகளை சோதனை செய்த போது அந்த அனுமதி சீட்டு சேம்பர் மண் என்று சொல்லக்கூடிய செம்மண் எடுக்க அனுமதி வழங்கியதும் அந்த அனுமதி சீட்டின் மூலம் கிராவல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

மேலும் கிராவல் எடுக்க ஒரு முறை அனுமதி சீட்டு பெற்று விட்டு அதனை பல நாள்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருவதாகவும் அனுமதி சீட்டில் உள்ள லாரியின் வாகன எண்ணை ஒரு சில லாரி உரிமையாளர்கள் மாற்றிக் கொள்வதாகவும் இதன் காரணமாக அளவுக்கு அதிகமாக கிராவல் மண் கடத்தி  ஏற்றி வருவதாகவும் மேலும் அனுமதி சீட்டு அனைவருக்கும் கிடைப்பதில்லை  என்றும் பாகுபாடோடு தான் வழங்கப்பட்டு வருவதாகவும்  சில கிராவல் மண் எடுக்கும் லாரி உரிமையாளர்கள் குற்றமும்  சாட்டுகின்றனர்.

ஒரு சிலர் செய்யும் இது போன்ற தவறுகளால்  முறையாக மண் எடுத்து விற்பனை செய்பவர்களுக்கும் பிரச்சினை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர். இதனை கனிம வளத்துறை அதிகாரிகள் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட  லாரிகளை அங்கு வந்த காவல்துறையினர் பறிமுதல்  செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.