தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மொழிப்போர் தியாகிகளால் தமிழினம் மேன்மை அடைந்தது: மு.க.ஸ்டாலின்

மொழிப்போர் தியாகிகளால் தமிழினம் மேன்மை அடைந்ததுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2022, 1:01 pm

DIN

மொழிப்போர் தியாகிகளால் தமிழினம் மேன்மை அடைந்ததுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், மொழிப்போர் தியாகிகளின் தியாகம்தான் எங்களை உயிர்ப்போடு வைத்துள்ளதாகவும் அவர் பேசினார். 

திமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின்,

1938-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் வெப்பம்தான் 2022-ஆம் ஆண்டு வரை நீடித்து வருகிறது. அந்த ஆண்டு மொழிப்போரில் ஏராளமான பெண்களும் போடாடினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட தாளமுத்து நடராசன் நினைவாக அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழுக்காக போராடி பல்வேறு கொடுமைகளை அனுபவித்து உயிர் நீத்தவர் நடராசன்.

மொழிப்போர் தியாகிகளின் நினைவாக பாலங்கள், மணிமண்டபங்கள், சாலைகள் அமைக்கப்படும். தமிழ் மொழிக்காக பேரறிஞர் அண்ணா போன்ற இளைஞர்கள் ஒன்றுகூடினார்கள்.

தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழினத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம்.

தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்காக தொழில் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.