மொழிப்போர் தியாகிகளால் தமிழினம் மேன்மை அடைந்ததுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், மொழிப்போர் தியாகிகளின் தியாகம்தான் எங்களை உயிர்ப்போடு வைத்துள்ளதாகவும் அவர் பேசினார்.
திமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின்,
1938-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் வெப்பம்தான் 2022-ஆம் ஆண்டு வரை நீடித்து வருகிறது. அந்த ஆண்டு மொழிப்போரில் ஏராளமான பெண்களும் போடாடினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட தாளமுத்து நடராசன் நினைவாக அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழுக்காக போராடி பல்வேறு கொடுமைகளை அனுபவித்து உயிர் நீத்தவர் நடராசன்.
மொழிப்போர் தியாகிகளின் நினைவாக பாலங்கள், மணிமண்டபங்கள், சாலைகள் அமைக்கப்படும். தமிழ் மொழிக்காக பேரறிஞர் அண்ணா போன்ற இளைஞர்கள் ஒன்றுகூடினார்கள்.
தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழினத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம்.
தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்காக தொழில் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.