காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க பரிந்துரை

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 1-இல் பள்ளிகள் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image
அன்பில் மகேஷ் (கோப்புப் படம்)
Updated On :27 ஜனவரி 2022, 7:58 am

DIN

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 1-இல் பள்ளிகள் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஒமைக்ரான் கரோனா வகையால் மூன்றாம் அலை பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள், பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் தரும் பட்சத்தில் ஒரு வாரத்திற்குள் பள்ளிகளை சுத்தப்படுத்தி கரோனா விதிமுறைகளுடன் முழு அளவிலான மாணவர்களுடன் செயல்படத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.