47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு: கே.எஸ்.அழகிரி விளக்கம்

சென்னையில் காங்கிரஸ் - திமுக இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

News image
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி
Updated On :28 ஜனவரி 2022, 5:49 am

DIN

சென்னையில் காங்கிரஸ் - திமுக இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளன.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியானது தொகுதி பங்கீடு குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:

காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்களை கொடுப்பது குறித்து பரிசீலனை செய்வதாக உறுதியளித்தனர். மாவட்ட ரீதியாக தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. பிரச்னையுள்ள பகுதிகளில் மட்டுமே கட்சித் தலைமை தலையிடும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.