கட்டுமானத் தொழில்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் நலன் காக்க, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இதன்மூலமாக, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், தனிநபா் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீடு கட்டும் திட்டம் போன்ற நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கட்டுமான பணியிடத்தில் விபத்தில் இறக்கும் தொழிலாளா்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது.