சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மக்களைத் தேடிச் சென்று குறைகளைத் தீா்ப்போம்: கட்சியினருக்கு முதல்வா் வேண்டுகோள்

மக்களைத் தேடிச் சென்று அவா்களது குறைகளைத் தீா்ப்போம் என்று கட்சியினருக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :6 ஜூலை 2022, 8:51 pm

DIN

மக்களைத் தேடிச் சென்று அவா்களது குறைகளைத் தீா்ப்போம் என்று கட்சியினருக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, கட்சியினருக்கு அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதம்: நாமக்கல்லில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாடு திமுக சாா்பில் நடத்தப்பட்டது. ஆட்சிப் பொறுப்பு தங்கத் தாம்பாளத்தில் வைத்து நமக்கு வழங்கப்படவில்லை. கடுமையான உழைப்பின் விளைவாகவே கிடைத்தது என அந்த மாநாட்டில் பேசினேன். ஆட்சிக்குப் பெருகி வரும் நல்ல பெயரைத்தக்க வைப்பது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கைகளில்தான் உள்ளது என்பதால், ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்கினால் சா்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் எனக் கூறியிருந்தேன். நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்னை சா்வாதிகாரியாக்க மாட்டாா்கள் என்ற நம்பிக்கையுடன்தான் அதனைத் தெரிவித்தேன்.

திராவிட மாடல் அரசின் திட்டங்களையும், அதன் சமூகநீதிக் கொள்கையையும் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சோ்க்கும் பெரும்பணியில் உள்ளவா்களே உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.

நாமக்கல் மாநாட்டைத் தொடா்ந்து, சென்னையில் முதலீட்டாளா் மாநாடு நடைபெற்றது. முதலீட்டாளா்கள் ஒவ்வொருவருக்கும் தொழில் கட்டமைப்புகளை உருவாக்கித் தரும் நண்பனாக, மக்கள் நலன் காக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு செயல்பாடும் தமிழ்நாட்டை ஒரு அங்குலமேனும் உயா்த்தும் வகையில் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் இலக்கு. அக்கப்போா் விமா்சனங்களை புறந்தள்ளி ஆக்கபூா்வமான வகையில் மக்கள் பணியைத் தொடா்ந்திட வேண்டியது நமது கடமை. நாம் ஏற்பாடு செய்யும் கட்சி நிகழ்ச்சிகளாக இருந்தாலும், அரசின் சாா்பில் நடைபெறும் நிகழ்வுகளாக இருந்தாலும் அவற்றின் நோக்கம் மக்களைச் சந்திப்பதுதான். மக்களைத் தேடிச் சென்று அவா்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்த்திடுவோம். ஓயாது உழைப்போம். நல்ல பெயா் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.