எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுர திருக்குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது!

சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக புதன்கிழமை காலை நடைபெற்றது.

News image

சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா. 

Updated On :6 ஜூலை 2022, 12:52 pm IST

திருச்சி: சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக புதன்கிழமை காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

Story image

வேண்டுவோருக்கு வேண்டும் அருள் தரும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு. 
   
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். வேண்டுவோருக்கு வேண்டும் தரம் அருளும் இத்திருக்கோயிலில் கிழக்கு ராஜகோபுர குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Story image

மக்கள் வெள்ளத்தில் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வெகு குடமுழுக்கு விழா. 

ஜூலை 3 ஆம் தேதி வாஸ்து சாந்தி, தன பூஜையோடு குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவ்யா ஹீ தியும், நடைபெற்றது . ஜூலை 4 ஆம் தேதி தொடங்கி ஜூலை 6 ஆம் தேதி நான்கு கால யாக வேள்வி பூஜையும், மஹாபூர் னா ஹதியும் நடைபெற்றது. 

தொடர்ந்து யாகசாலையிலுருந்து பக்தி பரவசம் முழங்க கடங்கள் புறப்பட்டு, இராஜகோபுர விமானத்திற்கு வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜைகளுடன் கோபுர கலசங்களுக்கு 7 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது.

Story image

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.  


இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

Story image

குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சாமி தரிசன் செய்யும் அமைச்சர் கே.என். நேரு.

இந்நிகழ்வில், அமைச்சர் கே.என்‌ நேரு, அறநிலையத் துறை முதன்மை செயலர் சந்திர மோகன், டிஐஜி சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மேயர் அன்பழகன், அறநிலையத் துறை இணை ஆணையர்கள் கல்யாணி, செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.