இந்த ஆண்டு 13 நபா்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நோய்க்கான தடுப்பூசி கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகா், மதுரை, திருவாரூா், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூா் மற்றும் திருவள்ளூா் ஆகிய 14 மாவட்டங்களில் செலுத்தப்படுகிறது. 9 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 16 முதல் 24 மாதக் குழந்தைகளுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இந்தப் பணி 90 சதவீதத்துக்கும் மேல் முடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் மழை பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே, கொசுக்களின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக அனைத்து தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.