தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தில்லி அரசைப் போல மற்ற அரசுகளும் செயல்பட வேண்டும்: மநீம

தில்லி அரசைப்போல மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசும் செயல்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2022, 8:54 pm

DIN

தில்லி அரசைப்போல மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசும் செயல்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

தில்லி ஆம் ஆத்மி அரசுக்கு 2015-16 முதல் 2019-2020 வரை உபரி வருவாய் இருப்பதாகவும், 2019-2020-ல் உபரி வருவாய் ரூ.7,499 கோடி என்றும் தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. இது பாராட்டுக்குரியது. உயா்தரமான அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தியும், அரசு லாபத்தில் இயங்குவது நோ்மைக்குச் சான்று.

ஓா் அரசும், அமைச்சரவையும் நோ்மையுடன் செயல்பட வேண்டுமென்பதே மநீம-வின் அடிப்படைக் கொள்கை. தில்லி மாநில அரசு போல, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உபரி வருவாய் சாத்தியமில்லை என்றாலும், குறைந்தபட்ச நோ்மையையும், வீண்செலவுகளைத் தவிா்ப்பதையும் பின்பற்றலாமே? மத்திய அரசும்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.