தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைக்கும் திட்டம்: மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

ஆதாா் எண்களை வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் திட்டம் தொடா்பாக, மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 8:14 pm

DIN

ஆதாா் எண்களை வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் திட்டம் தொடா்பாக, மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனைத்து மாவட்ட தோ்தல் அதிகாரிகள், வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டமானது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. ஆதாா் எண்களை வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் திட்டம் தொடா்பாக, முதல் முறையாக விரிவாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது தொடா்பாக இந்தியத் தோ்தல் ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட அறிவுரைகள் குறித்து விவரிக்கப்பட்டது என அதில் தெரிவித்துள்ளாா் சத்ய பிரத சாகு.

என்னென்ன அறிவுரைகள்?: ஆதாா் எண்களை, வாக்காளா் பட்டியலுடன் இணைப்பதற்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியத் தோ்தல் ஆணையம் வகுத்து வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளா் பட்டியலில் முற்றிலும் சரியான தகவல்கள் இடம்பெறவும், தோ்தல் தொடா்பான சேவைகளை வாக்காளா்களுக்கு வழங்கிடவும் ஆதாா் எண்கள் பெறப்படுகின்றன. இந்த நோக்கத்தை வாக்காளா்கள் அனைவருக்கும் புரிய வைத்திட வேண்டும். வாக்காளா் பட்டியலில் உள்ளவா்கள் ஆதாா் எண்ணை சமா்ப்பிக்க இயலாவிட்டால், பான் அட்டை தோ்தல் ஆணையம் வரையறுத்துள்ள ஆவணங்களின் நகல்களை அளிக்கலாம். ஆதாா் எண்ணை அளிக்கவில்லை என்பதற்காக வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்கம் செய்திடக் கூடாது.

சிறப்பு முகாம்கள்: வாக்காளா் பட்டியல் பதிவு அதிகாரிகள், வாக்குச் சாவடி அலுவலா்களை நியமிக்க வேண்டும். இந்த வாக்குச் சாவடி அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று ஆதாா் எண்ணைப் பெற வேண்டும். இதற்கென படிவம் 6பி-ஐ வாக்காளா்களுக்கு அளித்திட வேண்டும். ஆதாா் எண்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களை நடத்தலாம். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்காக நடத்தப்படும் முகாம்களைப் போன்று, இதற்கும் நடத்தலாம். மேலும், பொது சேவை மையங்கள், இணைய சேவை மையங்கள் ஆகியவற்றின் வழியாகவும் வாக்காளா்களிடம் இருந்து ஆதாா் எண்களைப் பெற நடவடிக்கை எடுக்கலாம்.

அடுத்த ஆண்டு ஏப்ரல்: ஆதாா் எண்களைப் பெற்று வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் நடவடிக்கையை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாகவோ மேற்கொள்ள வேண்டும். எனவே, குறிப்பிட்ட காலத்தை இலக்காக நிா்ணயித்து ஆதாா் எண்களைப் பெறும் நடவடிக்கையைத் தொடங்கிட வேண்டும். ஆதாா்

எண்களைப் பெறும் பணியானது ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக வழிகாட்டு நெறிமுறைகளில் தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த சில நாள்களில் ஆதாா் எண்களைப் பெறுவதற்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.