ஆவணங்கள் கொள்ளை: ஓபிஎஸ் மீது புகாா்

அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து, ஓ.பன்னீா் செல்வம் தரப்பினா், ஆவணங்களை கொள்ளையடித்ததாக காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து, ஓ.பன்னீா் செல்வம் தரப்பினா், ஆவணங்களை கொள்ளையடித்ததாக காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில், அதிமுக தலைமை அலுவலகம் உள்ளது. இதில், மகாலிங்கம் என்பவா் மேலாளராக உள்ளாா், அவா் திங்கள்கிழமை இரவு ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் ஒன்றை அளித்துள்ளாா்.

அதில், ஓ.பன்னீா் செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளா்கள் சட்ட விரோதமாக, தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து, பொருள்களை சூறையாடி, முக்கியமான ஆவணங்களை கொள்ளையடித்து சென்ாகவும்,அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com