6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கல்லூரி மாணவர் சேர்க்கை: க. பொன்முடி

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வெழுதியவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும்  என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.

News image
சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகே மாணவர் சேர்க்கை: க. பொன்முடி (கோப்புப்படம்)
Updated On :14 ஜூலை 2022, 9:07 am

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று பிளஸ் 2 தேர்வெழுதியவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக ஒரு மாத காலம் ஆகலாம் என்று யுஜிசி தெரிவித்திருந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் பொன்முடி, ஜூலை மாதத்துக்குள்ளாகவே தேர்வு முடிவுகளை வெளியிட  வேண்டும். முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதத்தால் கல்லூரி மாணவர் சேர்க்கையும் தாமதமாகிறது. இது  மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை மட்டும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நடைபெறும் என்றார்.

மேலும், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பாக  கருத்து கேட்டு வரும் நிலையில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசியது தவறு. தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையையே வலியுறுத்துகிறது என்று, மதுரை காமராஜர் பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியது பற்றி கருத்துக் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.