உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தொடர் மழையால் திருப்பூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர்மழையால் திருப்பூர் அணைப்பாளையம் தடுப்பணை நீரில் மூழ்கியது.

News image

திருப்பூர் அணைப்பாளையத்தில் நீரில் மூழ்கிய நிலையில் தரைப்பாலம்.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:18 pm IST



திருப்பூர்: மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர்மழையால் திருப்பூர் அணைப்பாளையம் தடுப்பணை நீரில் மூழ்கியது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பில்லூர் உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்பி வருகிறது. 

இந்த நிலையில், நொய்யல் ஆற்றிலும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் உள்ள நல்லம்மன் கோயில் மற்றும் வழிப்பாதை முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

அதே போல, திருப்பூர் பெரியாண்டிபாளையத்தில் இருந்து அணைப்பாளையம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலமும் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து தரைப்பாலத்தின் இரு புறங்களிலும் கற்களை வைத்து காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அதே வேளையில், தரைப்பாலத்துக்கு அருகில் உள்ள மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.