வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொடர் மழையால் திருப்பூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர்மழையால் திருப்பூர் அணைப்பாளையம் தடுப்பணை நீரில் மூழ்கியது.

News image

திருப்பூர் அணைப்பாளையத்தில் நீரில் மூழ்கிய நிலையில் தரைப்பாலம்.

Updated On :15 ஜூலை 2022, 8:27 am



திருப்பூர்: மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர்மழையால் திருப்பூர் அணைப்பாளையம் தடுப்பணை நீரில் மூழ்கியது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பில்லூர் உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்பி வருகிறது. 

இந்த நிலையில், நொய்யல் ஆற்றிலும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் உள்ள நல்லம்மன் கோயில் மற்றும் வழிப்பாதை முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

அதே போல, திருப்பூர் பெரியாண்டிபாளையத்தில் இருந்து அணைப்பாளையம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலமும் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து தரைப்பாலத்தின் இரு புறங்களிலும் கற்களை வைத்து காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அதே வேளையில், தரைப்பாலத்துக்கு அருகில் உள்ள மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.