சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை: காலை 11 மணிக்கு தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணை நிரம்பியதால் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று காலை 11 மணியளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

News image
Updated On :16 ஜூலை 2022, 3:40 am

DIN

மேட்டூர் அணை நிரம்பியதால் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று காலை 11 மணியளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கர்நாடக அணைகள் நிரம்பியதால் உபரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 119.29 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 671 கன அடி தண்ணீர் வருகிறது.

Story image

அணையின் கொள்ளளவு 92.343 டிஎம்சி ஆகும்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தற்போது 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிரம்பியதால் இன்று காலை 11 மணி அளவில் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

Story image

மேட்டூர் அணை இன்னும் சற்று நேரத்தில் நிரம்ப உள்ளதால் காவிரி கரையோர பகுதிகளிலும், மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தண்டோரா போட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

மேட்டூர் அணை சற்று நேரத்தில் நிரம்பியதும் 16 கண் மதகு வழியே தண்ணீர் வெளியேற்றவும் நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.