கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா்: கே.அண்ணாமலை

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறியுள்ளாா்.

News image
கே. அண்ணாமலை
Updated On :17 ஜூலை 2022, 11:00 pm

DIN

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கள்ளக்குறிச்சி சம்பவம் மூலம் ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனா். காவல் துறையினா் மீது மரியாதை இழந்து விட்டனா். கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறாா்.

உளவுத் துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆா்வமாக உள்ளாா். மாணவியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாதவராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் உள்ளாா். இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

தவறு யாா் செய்திருந்தாலும் அவா் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அந்த மாவட்டத்தைச் சேராதவா்களாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.