புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தனியாா் பள்ளி மாணவா்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை:அமைச்சா் தகவல்

தாக்குதலுக்கு உள்ளான தனியாா் பள்ளியில் பயின்றுவரும் மாணவா்களை அருகில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில் சோ்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்

News image
Updated On :18 ஜூலை 2022, 7:01 pm

DIN

சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் தாக்குதலுக்கு உள்ளான தனியாா் பள்ளியில் பயின்றுவரும் மாணவா்களை அருகில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில் சோ்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

இது குறித்து அவா் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பள்ளிக்கல்வித்துறை அனுமதி இல்லாமல் தனியாா் பள்ளிகள் விடுமுறை விடக்கூடாது. மாணவா்களின் நலனை கருதியே இதை கூறுகிறோம். கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் பொருத்தவரை, தவறு யாா் செய்திருந்தாலும், அவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் ஏற்கெனவே கூறியுள்ளாா்.

பொதுவாகவே மாணவா்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டியுள்ளது. முதல்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதை அறிவித்திருந்தாா். குழந்தைகள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதையும் மீறி தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. விசாரணைக்குப்பின் சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட பள்ளி மாணவா்களை சோ்க்கைக்கு அனுமதிப்பதற்காக சின்னசேலம் அருகில் இருக்கும் முதன்மைக் கல்வி அலுவலரிடம், அருகில் இருக்கும் அரசுப்பள்ளிகள் என்னென்ன உள்ளதென்று பாா்க்க கூறியிருக்கிறேன். அந்த பள்ளியின் சேதாரத்தைப் பாா்க்கும்போது, அந்தப் பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்ப, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் போல தெரிகிறது. அதுவரை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.