ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சீர்காழி: கொள்ளிடத்தில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 1.25 லட்சம் கன அடி தண்ணீர்  சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே பழையாறு கடலில் கலந்தது.

News image
கொள்ளிடம் ஆற்றின் வழியே ஆர்ப்பரித்துச் செல்லும் நீர்
Updated On :19 ஜூலை 2022, 12:20 pm

DIN

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 1.25 லட்சம் கன அடி தண்ணீர்  சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே பழையாறு கடலில் கலந்தது.

ஆற்றின் கரையோரம் மற்றும் திட்டு பகுதி கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தல்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீரானது தமிழக பகுதிக்கு வந்து வண்ணம் உள்ளது.

Story image

இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீரானது முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றின் வழியே திருப்பி விடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திறக்கப்பட்ட தண்ணீரானது இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்தது.

Story image

கொள்ளிடம் பாலத்தில் ஆர்ப்பரித்துச் செல்லும் தண்ணீரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவ்வழியாக வாகனங்களில் ஆற்று வெள்ளத்தை பார்த்து செல்வதால் வாகன நெரில் ஏற்பட்டது.

Story image

அதே நேரம் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகளை  பாதுகாப்பாக மேடான பகுதிகளுக்கு அழைத்துச்செல்ல வருவாய்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.