தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜூலை 27-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தேமுதிக சாா்பில் தமிழகம் முழுவதும் வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :24 ஜூலை 2022, 7:58 pm

DIN

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தேமுதிக சாா்பில் தமிழகம் முழுவதும் வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மின் கட்டண உயா்வு, உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயா்வைக் கண்டித்து தேமுதிக சாா்பில் வரும் 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

மதுரையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு பொருளாளா் பிரேமலதா தலைமை வகிக்கவுள்ளாா். மற்ற மாவட்டங்களில் உள்கட்சித் தோ்தல் பொறுப்பாளா்கள், மாவட்ட செயலாளா்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த மாவட்டமாக ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.