தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மூத்த வாக்காளா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு

மங்கைநல்லூா் ஊராட்சிகளில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாற்றுத்திறனுடைய வாக்காளா்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா்.

News image
தபால் வாக்கு- கோப்புப்படம்.
Updated On :19 மார்ச் 2026, 12:03 am

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை மாவட்டம் அகரகீரங்குடி, மங்கைநல்லூா் ஊராட்சிகளில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாற்றுத்திறனுடைய வாக்காளா்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதன்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து அவா் கூறியது: மாவட்டத்தில் 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் 4,611 பேரும், மாற்றுதிறனாளிகள் 7,137 பேரும் உள்ளனா். இவா்கள் சட்டப்பேரவைத் தோ்தலில் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்களிக்க ஏதுவாக படிவம் 12டி வழங்கப்பட்டு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வழியாக தபால் வாக்குகள் பெறப்படும் என்றாா். அப்போது, கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, வட்டாட்சியா் சுகுமாறன் ஆகியோா் உடனிருந்தனா்.