சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகம்: தயாரிப்பு நிறுவனங்களை கண்டித்து போராட்டம் நடத்த திட்டம் 

ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாக நுகர்வோர் பொருள்களுக்கு விலையைக் குறைத்து வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக வரும் டிசம்பரில் போராட்டம்

News image

தமிழ்நாடு நுகர்வோர் பொருள்கள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் மோகன் சங்கர்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:22 pm IST

ஈரோடு: ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாக நுகர்வோர் பொருள்களுக்கு விலையைக் குறைத்து வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக வரும் டிசம்பரில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்வோர் பொருள்கள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் மோகன் சங்கர் மற்றும் தலைவர் எம். வெங்கடேஷ் கூறினர்.

கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  சில தயாரிப்பு நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு குறைந்த விலையிலும் பாரம்பரிய விநியோகஸ்தர்களுக்கு அதிக விலையிலும் பொருள்களை வழங்குகின்றன. இது தொடரும் எனில் வரும் டிசம்பரில் கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெறுவதற்கு முன்போ அல்லது பின்போ சில்லறை வணிகர்களுடன் இணைந்து  மாநில அளவில் அந் நிறுவனங்கள் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும். 

மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும், வணிகர் நல வாரியத்தால் வழங்கப்படும் உதவித் தொகையை அதிகப்படுத்த வேண்டும், ஆன்லைன் வணிகத்தை முறைப்படுத்த மத்திய அரசு ஒரு குழு அமைக்க வேண்டும், சேதமடைந்த மற்றும் காலாவதியான பொருள்களை திரும்ப பெறாத நிறுவனங்களை புறக்கணிப்போம், விநியோகஸ்தர்களின் செலவினங்கள் மிக அதிக அளவில் உள்ளது. எனவே, லாப விகிதத்தை விநியோகஸ்தர்களுக்கு அதிகரிக்க வேண்டும், சேல்ஸ்மேன் சம்பளம் வாகனச் செலவு போன்றவைகளை தயாரிப்பு நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும். 

டாபர் நிறுவனம் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் விரோத போக்கை கடைபிடித்தால் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெறும். மேரிகோ நிறுவனம் பெரிய கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் நேரடியாக சப்ளை செய்யும் திட்டத்தை அமல்படுத்தினால் அந்த தயாரிப்பு நிறுவன பொருள்களை புறக்கணிப்போவதாக அவர்கள் கூறினர்.

மாநில கௌரவ ஆலோசகர்கள் ஜெகதீசன் காதர் முகைதீன் துணைத் தலைவர் எஸ். ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.