

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று(ஜூலை 25) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்திருந்தார். அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஜூலை 25ஆம் தேதி காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்த நிலையில், மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: மாநிலங்களவை எம்.பி.யாக இன்று பதவியேற்கிறார் இளையராஜா
சென்னையில் வரும் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.