கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கனியாமூரில் கலவரம் நடைபெற்ற பள்ளியில் பயின்ற மாணவர்களின் கல்வி தொடர்பாக ஆட்சியர் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில், பிளஸ் 2 மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரியும், பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மாணவியின் உடலும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
மேலும், சேலம் டிஐஜி பிரவீன்குமார்அபிநபு தலைமையிலான காவல் அதிகாரிகள் மாணவி தற்கொலை செய்துகொண்ட பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், அப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

