கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கனியாமூரில் கலவரம் நடைபெற்ற பள்ளியில் பயின்ற மாணவர்களின் கல்வி தொடர்பாக ஆட்சியர் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில், பிளஸ் 2 மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரியும், பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல் துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மாணவியின் உடலும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
மேலும், சேலம் டிஐஜி பிரவீன்குமார்அபிநபு தலைமையிலான காவல் அதிகாரிகள் மாணவி தற்கொலை செய்துகொண்ட பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், அப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பொதுமக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்: ஆப்கன் குற்றச்சாட்டு!

சிலிண்டர் தட்டுப்பாடு: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பெட்ரோல் நிலையத்தில் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணப் பையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!

மேகாலயா: வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்வு!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

