குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்: ஓபிஎஸ்

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கம் நியமிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

News image

ஓ.பன்னீர்செல்வம் / ஆர்.வைத்திலிங்கம் (கோப்புப் படங்கள்)

Updated On :1 பிப்ரவரி 2024, 3:23 pm IST

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கம் நியமிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் தொடர் குழப்பம் நீடித்து வரும் நிலையில், 
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக பொறுப்பாளர்களை நியமித்தும், நீக்கம் செய்தும் வருகின்றனர். 

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கம் நியமிக்கப்படுவதாக ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களையும் நீக்கம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜேடிசி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதிமுகவிலிருந்து சிறுணியம் பலராமன், எம்.சி.சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், ராஜேந்திர பாலாஜி, கிருஷ்ணமுரளி, கடம்பூர் ராஜு, வி.எஸ்.சேதுராமன் உட்பட 10 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.