பிரதமா் மோடி வருகை: சென்னையில் 22 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு: ட்ரோன்கள் பறக்கத் தடை
பிரதமா் நரேந்திரமோடி சென்னைக்கு வியாழக்கிழமை (ஜூலை 28) வருவதையொட்டி, 22 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். பாதுகாப்பு கருதி, சென்னை நகரில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.







