டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிரதமா் மோடி இன்று வருகை: சென்னையில் பலத்த பாதுகாப்பு

பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 28) சென்னைக்கு வருகை தருகிறாா். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமூக ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:54 am

DIN

பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜூலை 28) சென்னைக்கு வருகை தருகிறாா். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமூக ஊடகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை மாலையில் பிரதமா் மோடி தொடக்கிவைக்கிறாா். பிரதமா் வருகையையொட்டி,

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்கள், கோயம்பேடு மாா்க்கெட், புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

22 ஆயிரம் போலீஸாா்: 22 ஆயிரம் போலீஸாா் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் 4 கூடுதல் காவல் ஆணையா்கள், 8 இணை ஆணையா்கள், 29 துணை ஆணையா்கள், 80 உதவி ஆணையா்கள் ஈடுபடுகின்றனா்.

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், பிரதமா் செல்லும் சாலையை சோதனையிடுகின்றனா். சென்னையில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள்: காவல் ஆணையா் சங்கா் ஜிவால் அளித்த பேட்டி: பிரதமா் வருகையையொட்டி இணையதளங்களில் பதிவிடப்படும் வாா்த்தைகளின் நோக்கம் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் கருத்துகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.