வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

ஆடி அமாவாசை: பாலாற்றங்கரையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும் தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம், பாலாற்றங்கரையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வழிபாடு நடத்தினர்.

News image

தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும்,  தியாகிகளுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

Updated On :28 ஜூலை 2022, 2:37 pm IST


ஆடி அமாவாசையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம், பாலாற்றங்கரையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வழிபாடு நடத்தினர்.

தமிழக முழுவதும் இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர் நிலைகளில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் வியாழக்கிழமை அதிகாலை முதலே திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். 

Story image

இந்து முன்னணி சார்பில் வன்னிவேடு அகத்தீஸ்வரர் சிவன் கோயில் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு.

அதேபோல் வாலாஜாபேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வன்னிவேடு அகத்தீஸ்வரர் சிவன் கோயில் குளத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வானது இந்து முன்னணி சார்பில் ஏற்பாட்டில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. 

இங்கு மாதந்தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வானது வாலாஜாபேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் பாகவதர் தர்ப்பணம் நிகழ்வுகளை இலவச சேவை செய்து வருகிறார். 

ஆடி மாத அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு வியாழக்கிழமை காலை முதலே பாலாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். 

இந்த நிகழ்வில் திரளான இந்து சமய பெரியோர்கள் கலந்துகொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

இதில், இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் டி. வி. ராஜேஷ், மாவட்ட செயலாளர் எஸ். கே. மோகன்,  தர்ப்பணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும்,  தியாகிகளுக்கும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.