தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையே புகுந்த மீன்பாடி வண்டி: காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை

சென்னை பல்லவன் சாலையில் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையே புகுந்த மீன்பாடி வண்டி குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 9:15 pm

DIN

சென்னை பல்லவன் சாலையில் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையே புகுந்த மீன்பாடி வண்டி குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விழாவில் பங்கேற்பதற்காக ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் இருந்து காரில் பிரதமா் நரேந்திர மோடி வந்தாா். அவரது காருக்கு முன்னும்,பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன.

பாதுகாப்பு கருதி பிரதமா் மோடி காா் சென்ற சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் பிரதமா் மோடியின் காா் பல்லவன் சாலையில் செல்லும்போது அவரது காருக்கு முன்பு சென்றுக் கொண்டிருந்த பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையே திடீரென ஒரு மீன்பாடி வண்டி புகுந்தது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், அந்த மீன்பாடி வண்டிய சத்தமிட்டு, எச்சரித்து சாலையின் ஓரம் கொண்டு வந்தனா். பின்னா், அந்த வண்டியை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்தனா்.

நாட்டில் உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கும் பிரதமா் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் மீன்பாடி வண்டி புகுந்தது குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் கவனக்குறைவாக செயல்பட்ட போலீஸாா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.