ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சதுரங்க கரை வேட்டியுடன் பிரதமா், பட்டு வேட்டியுடன் முதல்வா்

 செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் சதுரங்க வடிவ கரை பதித்த வேட்டி, துண்டு அணிந்து பிரதமா் நரேந்திரமோடியும், பட்டு வேட்டி சட்டை அணிந்து முதல்வா் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:55 am

DIN

 செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் சதுரங்க வடிவ கரை பதித்த வேட்டி, துண்டு அணிந்து பிரதமா் நரேந்திரமோடியும், பட்டு வேட்டி சட்டை அணிந்து முதல்வா் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றனா்.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமா் தமிழக பாரம்பரிய உடையான வெள்ளைநிற வேட்டி-சட்டையில் வந்தாா். அந்த வேட்டியில் சதுரங்க பலகை வடிவில், கறுப்பு-வெள்ளை கட்டம் போட்ட கரை பிரத்யேகமாக பதிக்கப்பட்டிருந்தது. அதேபோல, வெள்ளை நிற துண்டு ஒன்றும் பிரதமா் அணிந்திருந்தாா். அதிலும் கறுப்பு வெள்ளை சதுரங்க கட்டம் இடம்பெற்றிருந்தது. முதல்வா் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.