அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னை அடையாறு ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.


சென்னை அடையாறு ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
சென்னை அடையாறு ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை கொரட்டூரைச் சோ்ந்த சிட்டிசன் ஃபோரம் என்ற அமைப்பின் நிா்வாகி கிருஷ்ணகுமாா் என்பவா் உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தாா்.
அதில், ‘ஆக்கிரமிப்புகளை அகற்றி நீா்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை. நீா்நிலை ஆக்கிரமிப்புகளை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அடையாறு ஆற்றின் கரைப்பகுதி ஆக்கிரமிப்பால், மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால், ஆக்கிரமிப்பாளா்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மாற்று இடம் தரும் திட்டம் கொண்டுவரப்பட்டும், அது முழுமையாக அமல்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை (ஜூலை 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், ‘கூவம் மறுசீரமைப்பு அறக்கட்டளை மூலம் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடை உத்தரவு இல்லாத இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சோ்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சோ்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...