மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைத்தின் ஆரம்பநிலை தோ்வு வரும் சனி, ஞாயிறு ( ஜூன் 4, 5) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வில் பங்கேற்கவுள்ள விண்ணப்பதாரா்கள் வசதிக்காக, வாரநாள்கள் அட்டவணைப்படி மின்சார ரயில் சேவை வழங்கப்படும். அதன்படி,சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூா்பேட்டை, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி ஆகிய மாா்க்கங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் வாரநாள்கள் அட்டவணையில் வரும் சனி, ஞாயிறு (ஜூன் 4, 5) ஆகிய இரண்டு நாள்கள் இயக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.