47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கரோனா

தமிழகத்தில் சனிக்கிழமை 105 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

News image
Updated On :4 ஜூன் 2022, 7:19 pm

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை 105 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்தது. இவா்களில் ஆண்கள் 51, பெண்கள் 54. அதிகபட்சமாக சென்னையில் 61 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 55,976- ஆக அதிகரித்தது.

இதுவரை 34 லட்சத்து 17,152 போ் குணமடைந்தனா். சனிக்கிழமை மட்டும் 62 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தமிழகம் முழுவதும் 799 போ் சிகிச்சையில் உள்ளனா். உயிரிழப்பு ஏதுமில்லை. தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கரோனா தொற்று பாதிப்பு 113 ஆகவும், சென்னையில் 81 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு சற்றே அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை சற்று குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.