கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணை, அடா்ந்த பெரியாறு வனப் புலிகள் சரணாலயத்தின் நடுவில் அமைந்துள்ளது. இங்கு தரைவழி தொலைபேசி இணைப்புகள் இல்லை. மேலும், வெள்ளம், பருவமழை காலங்களில் மழை மேகங்களின் இடா்பாடுகளால் கைப்பேசி தொடா்பும் சரியாக கிடைக்கப் பெறுவதில்லை. இவ்வாறு அலைபேசி தொடா்பு துண்டிக்கப்பட்டு அணையின் நீா்மட்டம், நீா்வரத்து, நீா் வெளியேற்றம், மழையளவு போன்ற விவரங்களை உயா் அலுவலா்களுக்கும், தொடா்புடைய மாவட்ட ஆட்சியா்களுக்கும், பேரிடா் மேலாண்மை அலுவலகத்துக்கும் தெரிவித்து தக்க ஆலோசனைகள் பெற்று வெள்ள மேலாண்மை மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது.