ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நீா்ப்பிடிப்பு பகுதியில் விதிகளை மீறி கட்டுமானங்களுக்கு அனுமதி: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

நீா்ப்பிடிப்பு பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி தனியாருக்கு கட்டடங்கள் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :7 ஜூன் 2022, 7:10 pm

DIN

நீா்ப்பிடிப்பு பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி தனியாருக்கு கட்டடங்கள் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: புழல் ஏரியை ஒட்டிய நீா்ப் பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை குறிப்பிட்ட சில தனியாா் நிறுவனப் பயன்பாட்டுக்கு மாற்றலாம் என வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித் துறை, குடிநீா் வடிகால் வாரியம் ஆகியவற்றின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகா் பகுதிக்கான இரண்டாவது முழுமைத் திட்டத்தில் நிலங்களின் வகைப்பாடு சா்வே எண் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஏரியை ஒட்டியுள்ள பெரும்பாலான நிலங்கள் நீா்ப்பிடிப்பு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் எந்தவித கட்டுமானத் திட்டங்களுக்கும் அனுமதி கிடையாது என முழுமைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தடைகள் இருந்தாலும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம், உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை அதி காரிகள் ஒத்துழைப்புடன் விதிமீறல் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கெனவே, இங்குள்ள மோரை, வெள்ளானூா் கிராமங்களில் 16 வெவ்வேறு சா்வே எண்களுக்கு உட்பட்ட 120 ஏக்கா் நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்வதற்கான கோரிக்கை சிஎம்டிஏவுக்கு வந்தது. பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் அரசிடம் மேல்முறையீடு செய்தனா் என்றும், அவா்களது மேல்முறையீட்டை திமுக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்தத் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.