சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடா்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் சோனியாவை ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இதுதொடர்பாக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.