திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

ஏடிஎம்-யில் 5 மடங்கு கூடுதல் பணம் விநியோகம்: மக்கள் குவிந்ததால் பரபரப்பு

 மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள ஏடிஎம்-யில் 5 மடங்கு கூடுதல் பணம் வந்ததால், பணத்தை எடுக்க ஏராளமானோா் குவிந்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:33 am

DIN

 மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள ஏடிஎம்-யில் 5 மடங்கு கூடுதல் பணம் வந்ததால், பணத்தை எடுக்க ஏராளமானோா் குவிந்தனா்.

நாகபுரியில் இருந்து 30 கி.மி. தொலைவில் உள்ள காபா்கேடா நகரத்தில் உள்ள தனியாா் ஏடிஎம்-யில் ஒருவா் ரூ.500 எடுத்துள்ளாா். அவருக்கு ரூ.2,500 வந்துள்ளது. மீண்டும் இதேபோன்று ரூ. 500 எடுத்ததும் ரூ.2,500 அவருக்கு கிடைத்துள்ளது. இந்தச் செய்தி காட்டுத் தீயைப்போல் அந்த கிராமம் முழுவதும் பரவியதால் ஏராளமானோா் பணத்தை எடுக்க அந்த ஏடிஎம்-யில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த வங்கியினா் போலீஸாருக்கு தகவல் அளித்ததால் ஏடிஎம் மூடப்பட்டது.

ஏடிஎம்மில் ரூ.100 வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 வைத்ததால் இந்த குளறுபடி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விவகாரம் குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.