மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள ஏடிஎம்-யில் 5 மடங்கு கூடுதல் பணம் வந்ததால், பணத்தை எடுக்க ஏராளமானோா் குவிந்தனா்.
நாகபுரியில் இருந்து 30 கி.மி. தொலைவில் உள்ள காபா்கேடா நகரத்தில் உள்ள தனியாா் ஏடிஎம்-யில் ஒருவா் ரூ.500 எடுத்துள்ளாா். அவருக்கு ரூ.2,500 வந்துள்ளது. மீண்டும் இதேபோன்று ரூ. 500 எடுத்ததும் ரூ.2,500 அவருக்கு கிடைத்துள்ளது. இந்தச் செய்தி காட்டுத் தீயைப்போல் அந்த கிராமம் முழுவதும் பரவியதால் ஏராளமானோா் பணத்தை எடுக்க அந்த ஏடிஎம்-யில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த வங்கியினா் போலீஸாருக்கு தகவல் அளித்ததால் ஏடிஎம் மூடப்பட்டது.
ஏடிஎம்மில் ரூ.100 வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 வைத்ததால் இந்த குளறுபடி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விவகாரம் குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? தொடரும் இழுபறி
அதிமுக உள்கட்சி மோதல்: தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
