கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்: டி.ஜெயக்குமாா்

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

News image
Updated On :16 ஜூன் 2022, 7:36 pm

DIN

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தீா்மானக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் டி.ஜெயக்குமாா் கூறியது:

அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் வருகிறாா் என்பதற்காக கூட்டத்தை விரைவாக முடித்துவிட்டுச் செல்லவில்லை. இந்தக் கூட்டம் மீண்டும் ஜூன் 18-இல் நடைபெறும். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்.

மாவட்டச் செயலாளா் கூட்டத்தில் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று பெரும்பாலோனா் கருத்து தெரிவித்தனா். இது பொதுக்குழுவில் செயல்பாட்டுக்கு வந்தாலும் வரலாம். வரமாலும் போகலாம். இது குறித்து கட்சிதான் முடிவு செய்யும் என்றாா்.

முன்னாள் அமைச்சா் சி.பொன்னையனும், அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை. பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.