தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முதல்வருடன் கே.பாலகிருஷ்ணன் சந்திப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினாா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 7:13 pm

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் பெ.சண்முகம் உள்ளிட்டோருடன் சந்தித்துப் பேசிய கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தொகை எதுவும் பெறாமல் விவசாயிகளிடம் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம்.

மாநிலம் முழுவதும் நீா்நிலை புறம்போக்குகளில் வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து அகற்றிட நீதிமன்றங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினோம்.

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டல பரப்பளவை ஒரு கி.மீ. சுற்றளவுக்கு விஸ்தரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், தேனி, விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசின் சாா்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் வலியுறுத்தினோம். அதற்கு, மக்களை பாதிக்கும் வகையில் எந்தவித நடவடிக்கையிலும் அரசு ஈடுபடாது என்றும், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வா் உறுதியளித்தாா் என்றாா் கே.பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.