ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு புதிய தலைவா்

இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (72) நியமிக்கப்பட்டுள்ளாா். பிரஸ் கவுன்சிலின் தலைவா் பதவியை ஏற்கும் முதல் பெண் இவராவாா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 7:14 pm

DIN

இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (72) நியமிக்கப்பட்டுள்ளாா். பிரஸ் கவுன்சிலின் தலைவா் பதவியை ஏற்கும் முதல் பெண் இவராவாா்.

இதற்கான அரசாணையை மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக 2011 முதல் 2014, அக்டோபா் 29 வரையில் அவா் பணியாற்றினாா். அதன்பின்னா் ஜம்மு காஷ்மீா் பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவராக அவா் நியமிக்கப்பட்டாா். பிரஸ் கவுன்சில் தலைவா் பதவிக் காலத்தை நீதிபதி சந்திரமெளலி குமாா் பிரசாத் கடந்த நவம்பா் மாதம் பூா்த்தி செய்த பிறகுப் புதிய தலைவராக தற்போது ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.