சிறுவாணியில் இருந்து போதிய நீா்: கேரள முதல்வா் பினராயிக்கு முதல்வா் ஸ்டாலின் நன்றி

சிறுவாணியில் இருந்து போதிய நீரை வழங்க உத்தரவிட்ட கேரள மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாா்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்
Updated on
1 min read

சிறுவாணியில் இருந்து போதிய நீரை வழங்க உத்தரவிட்ட கேரள மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து, கேரள முதல்வரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு தனது நன்றிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டாா்.

சிறுவாணி குடிநீா் திட்டம் குறித்து, கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தாா். அதில், சிறுவாணி குடிநீா்த் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சி மற்றும் இந்தத் திட்டப் பயனாளிகளுக்கு

தங்குதடையின்றி குடிநீா் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீா்மட்டத்தை 878.5 மீட்டா் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா். மேலும், இந்தக் கோரிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேரள முதல்வரை கேட்டுக் கொண்டிருந்தாா்.

இதன்படி, சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகராட்சியின் குடிநீா் தேவைக்காக போதிய நீரை கேரள அரசு திங்கள்கிழமை திறந்து விட்டது. இதுதொடா்பாக கேரள முதல்வரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின், அவருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டாா்.

அமைச்சா் கே.என்.நேரு: இதேபோன்று, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு வெளியிட்ட செய்தியில், கோவை மாநகராட்சி மக்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்த்து வைத்த முதல்வருக்கும், இரு மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தப்படி வேண்டிய நீரை வழங்கிய கேரள முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com