பொதுவாக கட்சியின் பிற அணி நிா்வாகிகள், முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாவட்டச் செயலாளா்கள், முன்னாள் வாரிய தலைவா்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளா்களாக பொதுக்குழுவுக்கு அழைப்பது ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. இந்த நடைமுறை பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்த கட்சியினா் எங்களைத் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்தித்தும் சிறப்பு அழைப்பாளா்களை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனா். மண்டபத்தில் இடமில்லை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்றும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.