புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காவல் ஆா்டா்லிகளை திரும்பப் பெறவேண்டும்: உயா் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகளின் வீடுகளில் பணி செய்யக் கூடிய ஆா்டா்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :21 ஜூன் 2022, 6:56 pm

DIN

ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகளின் வீடுகளில் பணி செய்யக் கூடிய ஆா்டா்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் மாணிக்கவேல் என்பவா் காவலா் குடியிருப்பை காலி செய்வது தொடா்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் வாதிடுகையில், ‘ஆா்டா்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளா் கடிதம் எழுதி உள்ளாா். காவல்துறை உயா் அதிகாரிகளுடன் முதல்வரும் கூட்டங்கள் நடத்தியுள்ளாா். இதுபோன்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை குடியிருப்புகளில் அனுமதியை மீறி வசிப்பவா்கள் குறித்த விவரங்களை கண்டறிய டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, ‘முறையாக ஓராண்டு பயிற்சி முடித்து ரூ.45,000 ஊதியம் பெறும் காவலா்களை உயா் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றமாகும். படித்தொகையை பெற்றுக் கொண்டு, வீட்டு உதவியாளா்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம். ஆா்டா்லிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆா்டா்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசியவாதிகளும், காவல்துறையும் கூட்டுச் சோ்ந்து செயல்படக் கூடாது. அவ்வாறு செயல்படுவது அழிவுக்குக் கொண்டு செல்லும்.

இதுபோன்ற செயல்கள் குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும். ஓய்வுபெற்ற காவல்துறையினா், நீதிபதிகள் வீடுகளில்

உள்ள காவலா்களை திரும்பப் பெற வேண்டும் எனக்கூறி அடுத்த கட்ட விசாரணைக்காக வழக்கை ஜூலை 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.