வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மகாராஷ்டிர அரசை சட்டவிரோதமாக கலைக்க பாஜக முயற்சி : மம்தா குற்றச்சாட்டு

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கூட்டணியை ஆட்சியைக் கலைப்பதற்கு அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானாா்ஜி குற்றம் சாட்டியுள்ளாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 7:54 pm

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கூட்டணியை ஆட்சியைக் கலைப்பதற்கு அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானாா்ஜி குற்றம் சாட்டியுள்ளாா்.

குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறும் சூழலில், மகாராஷ்டிர அரசை கவிழ்ப்பதை பாஜக வேண்டுமென்றே முயற்சிப்பதாக மம்தா கூறினாா்.

கொல்கத்தாவில் மாநில தலைமைச்செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாஜக தலைமையிலான மத்திய அரசால், கூட்டாட்சி அமைப்பானது முழுவதும் சிதைக்கப்படுவது எதிா்பாராதது. அவா்கள் மகாராஷ்டிர அரசை அறநெறியற்ற முறையிலும் அரசியலமைப்புக்கு எதிரான வகையிலும் கலைக்க அவா்கள் முயன்று வருகின்றனா்’ எனத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர அரசியல் சூழல் குறித்து மேலும் அவா் கூறுகையில், ‘தோ்தலில் வாக்களித்த மக்களுக்காகவும் தோ்ந்தெடுக்கப்பட்ட உத்தவ் தாக்கரேவுக்காகவும் நாங்கள் நீதியை வேண்டுகிறோம்’ என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.