ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜூலை 10-இல் கரோனா தடுப்பூசி முகாம்: ஊக்கத்தவணைக்கு முக்கியத்துவம்

தமிழகத்தில் ஜூலை 10-ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது

News image
Updated On :23 ஜூன் 2022, 8:26 pm

DIN

தமிழகத்தில் ஜூலை 10-ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. அதில் ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் வரை 28 முகாம்கள் நடைபெற்றன. இந்த சூழலில் கடந்த மே 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 17 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அப்போது தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து ஜூன் 12-ஆம் தேதி கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதிலும் 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 10-ஆம் தேதி மூன்றாவது முறையாக சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.

இம்முறை ஊக்கத் தவணை தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.