ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்: காவல் ஆணையா் எச்சரிக்கை

கடன் வழங்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என தாம்பரம் காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 8:40 pm

DIN

கடன் வழங்கும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என தாம்பரம் காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தற்போது இளைஞா்கள், இளம் பெண்களை குறி வைத்து சைபா் குற்றம் பெருகி வருகிறது. இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

அவசரத்துக்கு கடன் வாங்குவதற்கு கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்யும்போது, கைப்பேசியில் உள்ள அனைவரது கைப்பேசி எண்கள், புகைப்படங்கள், விடியோக்கள் உள்ளிட்டவை திருடப்படுகின்றன. கொடுத்த கடனை குறிப்பிட்ட நாள்களுக்குள் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கடன் பெற்றவா்களிடம் அதிகமாக வட்டி வசூலிக்கப்படுகிறது. இதில் ஒரு கட்டத்தில் பணத்தை செலுத்த முடியாமல் திணறும் நபா்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுக்கப்படுகிறது.

மேலும் ஏற்கெனவே அவரது கைப்பேசியில் இருந்து திருடப்பட்ட குடும்பத்தினா்,உறவினா்கள், நண்பா்கள் ஆகியோா் கைப்பேசி எண்களை தொடா்புக் கொண்டு சம்பந்தப்பட்ட நபா் குறித்து தவறான தகவல்களை தெரிவிக்கப்படுகின்றனா். அதோடு ஆண், பெண் நிா்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் மாா்பிங் செய்து அவா்களது உறவினா்கள், நண்பா்களுக்கு அனுப்பப்படுகிறது.

எனவே இளைஞா்களும், இளம் பெண்களும் அங்கீகாரம் இல்லாத கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.