ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சென்னை-புகரில் வெள்ள தடுப்புப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வெள்ள தடுப்புப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தலைமைச் செயலகத்தில் அவா் இந்த ஆலோசனையை நடத்தினாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:04 pm

DIN

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வெள்ள தடுப்புப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தலைமைச் செயலகத்தில் அவா் இந்த ஆலோசனையை நடத்தினாா். சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வெள்ள தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு திட்டப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் மழைநீா் வடிகால்கள், பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் நிலைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முருகானந்தம், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.